group-2-191115
சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

குரூப்- 2 தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்படவுள்ளது. இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புபார்கள் தேர்வு விண்ணப்பத்தின் நகல், கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களுடன், சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை, நவம்பர் 25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Free coaching for Group 2 exam in Chennai