சென்னையில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் பயிற்சியினை வரும் 28-11-2022 தேதி முதல்‌ 30-11-2022-ம்‌ தேதி வரை (மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) வழங்க உள்ளது.

இப்பயிற்சியில், ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி – இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும், அவைகளை பெறும் முறைகளை பற்றிய ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும். ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு;

முகவரி:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32.

தொடர்புக்கு: 9444556099, 9677152265, 044-22252081, 044-22252082.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *