தமிழக அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மங்கள்யான் தொழில் நுட்பத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியன இணைந்து சென்னை, அம்பத்தூர் மகாகவி பாரதியார் நகர், சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் வரும் 29ஆம் தேதி இலவசமாக நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கவுள்ளன.

வரும் 29ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை, அம்பத்தூர் மகாகவி பாரதியார் நகர், சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் தமிழக அரசின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, ஜி.எஸ்.டி., ஏற்றுமதி இறக்குமதி பயிற்சியுடன் கூடிய விநியோகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

இப்பயிற்சிகளுக்கு முன்பதிவு செய்தவர்கள் பங்கேற்கலாம். 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் மேற்படிப்பு படித்த வேலையில்லா ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியாளர்களுக்குப் பயிற்சிக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்துச் செலவையும் தமிழக அரசு வழங்குகிறது. விண்ணப்பம் மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்கள். 98690 41169, 72999 55904, 72999 55906.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *