சென்னை ஆலந்தூர் மற்றும் அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

ஆலந்தூர் ரோட்டரி கிளப், எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள் குழுமம் சார்பில் இம்முகாம் நடைபெறுகிறது. மருத்துவப் பரிசோதனை, பல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் எஸ்.ஆர்.எம். சிறப்பு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர்,

எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொள்கின்றனர். இந்த முகாமில் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, இலவச மருத்துவ ஆலோசனை, மருத்துவ பரிசோதனை செய்து பயன்பெற மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *