டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டும் வகையில் இலவச கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் ச.வீரபாபு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், காவல் உதவி ஆய்வாளர் உள்பட அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற வழிகாட்டு கருத்தரங்கம் சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் எதிரில் உள்ள அரசன் மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் தேர்வுக்கு தயாராவது எப்படி, பாடத்திட்டங்களின் விவரம், வினாக்களை எதிர்கொள்ளுதல் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

மாணவர்கள் நலனுக்காக இலவசமாக நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் 044- 42037294, 99419 37976, 97103 75604, 9176392791 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *