சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட உள்ள குரூப் 1 தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு வியாழக்கிழமைக்குள் (ஜனவரி 31) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர்அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன்படி, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 1 தேர்வில் எளிதில் வெற்றி பெறும் வகையில் இலவசப் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்களுடன் வியாழக்கிழமைக்குள் (ஜனவரி 31) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), சாந்தோம், சென்னை-4 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 24615160 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *