சென்னை: துணை கலெக்டர் உள்ளிட்ட பணிகளில் 181 காலியிடங்களுக்கான ‘குரூப் – 1’ தேர்வின், விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் – 1 பணிகளுக்கு, மார்ச், 3ல் முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது. துணை கலெக்டர், டி.எஸ்.பி., – வணிக வரி கமிஷனர் உள்ளிட்ட பணிகளில் 181 காலியிடங்கள், இந்த தேர்வின் வழியே நிரப்பப்படுகின்றன.

இந்த தேர்வுக்கு 2.15 லட்சம் ேபர் விண்ணப்பித்து அவர்களில் 75 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், தேர்வுக்கான தோராய விடை குறிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. விடையில் மாற்றுக் கருத்து உள்ள தேர்வர்கள் வரும் 11ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி., யின் இணையதளத்தில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *