தமிழ்நாட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 95 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் குரூப்1 முதன்மை தேர்வுகள் இன்று(10.08.2023) தொடங்கி ஆகஸ்ட் 13 ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 95 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட்டது.

இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வு எழுத வேண்டும். அந்த வகையில் குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. சென்னையில் 22 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 2,113 பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புகள் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளன.

கட்டாய தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு, விரிவாக எழுதுதல் உட்பட 4 தாள்களாக தேர்வு நடைபெற உள்ளது. முதல் தாளான தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இதர தாள்கள் திருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *