TNPSC_logoகுரூப் 2 தொகுதியின் கீழ் ஏற்பட்ட காலியிடங்களுக்கு ஏற்கனவே எழுத்துதேர்வு நடைபெற்று அந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 22-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: குரூப் 2 தொகுதியில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில், கடந்த 2012-ஆம் ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு இதுவரை 6 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள முன்னாள் ராணுவத்தினருக்கான 3 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும் வகையில் 7-ஆவது கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு – கலந்தாய்வுக்கு தாற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு – கலந்தாய்வு வரும் 22-ஆம் தேதியன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

English Summary: Group -2 Applicants Counselling Date Announced.