தமிழகத்தில் ஆங்கில பொதுத் தேர்வில் தவறுதலாக கேட்கப்பட்ட வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வு துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு:

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த தேர்விற்கு 9,76,789 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அதில், தமிழகத்தில் இருந்து 9,22,725 பேர், புதுச்சேரியில் இருந்து 15,566 பேரும், தனித்தேர்வர்கள் 37,798 பேரும் தேர்வு எழுதி வருகின்றனர். ஏப்ரல் 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு ஆங்கில மொழி பாடத் தேர்வில் வினா எண் 4, 5, 6 ஆகிய 1 மதிப்பெண் வினாவும், இரண்டு மதிப்பெண் கொண்ட 22 வது வினா எண்ணும் தவறுதலாக கேட்கப்பட்டிருந்தது.

இந்த தவறுதலாக கேட்கப்பட்ட வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என மாநில பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம் தேர்வு துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற தேர்வு துறை தவறுதலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஐந்து மதிப்பெண்களை முழுமையாக கருணை அடிப்படையில் வழங்க முடிவு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த செய்தி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது. இதே போல் முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு கணித தேர்வு தவறாக கேட்கப்பட்ட ஐந்து மதிப்பெண்களுக்கு கேள்விக்கு ஐந்து மதிப்பெண்கள் தேர்தல் இயக்குனர்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு மே 17ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வு துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *