சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கத்தோடு 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்த ஆலோசனை நிகழ்ச்சியை 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. இந்நிகழ்ச்சி வரும் 19-ம் தேதி மதியம் 2 மணிக்கு லயோலா கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *