சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து அந்த படத்தில் பணிபுரிந்து அனைவரையும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக நடித்த அரவிந்தசாமி, இந்த படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளார். இந்நிலையில் நேற்று அரவிந்தசாமி டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அவரிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சுவாரசியமாக பதிலளித்தார். இந்த சுவாரசியமான கேள்வி-பதிலை தற்போது பார்ப்போம்

தொடர்ந்து வில்லனாக நடிப்பீர்களா? அப்படி நடித்தால் யாருக்கு வில்லனாக நடிப்பீர்கள்?

‘என்னுடைய கேரக்டர் வலிமையாக இருக்க வேண்டும். அந்த கேரக்டர் எனக்கு பிடித்திருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் வில்லனாக நடிக்க தயார்’

விஜய் படத்தில் வில்லனாக நடிப்பீர்களா? அல்லது அண்ணனாக நடிப்பீர்களா?

இரண்டும் இல்லை

அஜீத் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

‘அஜீத்தை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நல்ல மனிதநேயமுள்ள ஒரு மனிதர் அவர்’

சீயான் விக்ரம் குறித்து?

‘நான் கல்லூரியில் படிக்கும்போது விக்ரம் எனக்கு சீனியர். நாங்கள் ஒருவரை ஒருவர் நீண்ட வருடங்களாக புரிந்து கொண்டிருக்கின்றோம்’

சூர்யாவுடன் உங்கள் நட்பு எப்படி?

சூர்யாவுடன் பல வருடங்களாக நட்புடன் இருக்கின்றேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூர்யா.

English Summary : Aravindh Swamy tweets for his fans questions and says that he wont play villain role in Vijay film.