இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 2019 ஜனவரி 11-ஆம் தேதி சென்னை பல்லாவரத்தில் நடைபெறவுள்ளது. ராணுவத்தில் ஜூனியர் ஆணையரக அதிகாரி, ஹவில்தார் ஆகிய பணியிடங்களுக்கான ஆள்தேர்வு சென்னை பல்லாவரம் ராணுவ முகாமில் 2019 ஜனவரி 11-இல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். இதுதவிர, ஆந்திரம், தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் நவம்பர் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 17-ஆம் தேதிக்கு பிறகு, அனுமதி அட்டை ஆன்லைன் மூலமாக வெளியிடப்படும்.

இந்த அனுமதி அட்டையை பிரிண்ட் எடுத்து வரவேண்டும். விண்ணப்பதாரர்கள் உடல்திறன் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலமாகத் தேர்வு செய்யப்படுவர் என பத்திரிகை தகவல் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *