விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் இந்தியா கண்டிப்பாக வெல்ல வேண்டும். அல்லது ‘டிரா’ செய்ய வேண்டும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

முதல் 2 டெஸ்டில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அதிரடியான மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முரளிவிஜய், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக தவான், ரிசப்பாண்ட், கருண்நாயர், பும்ரா அல்லது உமேஷ்யாதவ் ஆகியோர் இடம் பெறலாம். குறைந்தபட்சம் 3 மாற்றம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. குர்ரான் இடத்தில் பென்ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *