போக்குவரத்து துறையில் புதிய புரட்சி என்று கூறப்படும், ‘ஹைப்பர்லுாப்’ ரயில்களை இயக்குவதற்காக, நாட்டிலேயே முதல் சோதனை தடத்தை, சென்னை ஐ.ஐ.டி., தயார் செய்துள்ளது. விரைவில் இதில் ரயிலை இயக்கி சோதிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சென்னையில் இருந்து திருச்சிக்கான, 330 கி.மீ., துாரத்தை வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும்.
