meat11116தமிழகத்தில் ஒருசில முக்கிய நாட்களில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் இம்மாதம் 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் வருவதை முன்னிட்டு, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இறைச்சி விற்னை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்ட இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் அன்றைய நாளில் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அன்றைய தினம் யாரும் விற்பனை செய்ய வேண்டாம் என வியாபாரிகளை சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

English Summary: January 16 to ban the sale of meat on account of Thiruvalluvar day.