கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

சென்னையின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப மெட்ரோ ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோயம்பேடுவரை செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்ட சேவையை ஆவடி வரை நீட்டிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இந்த கோரிக்கையை பரிசீலித்த மெட்ரே ரயில் நிா்வாகம் ரயில் சேவையை ஆவடி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ரூ.6,376 கோடி மதிப்பில், கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம், முகப்போ் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. நீளத்துக்கு 15 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையில், இத்திட்டம் நிறைவேற்ற சாத்தியமானது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *