“தெய்வமகள்”, “நாயகி”, “திருமதி செல்வம்” நெடுந்தொடர்களை தொடர்ந்து, குடும்பங்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற “நாதஸ்வரம்” மற்றும் “குலதெய்வம்” நெடுந்தொடர்களை ஒளிபரப்ப கலைஞர் தொலைக்காட்சி முடிவு செய்திருக்கிறது.

இதில், “குலதெய்வம்” நெடுந்தொடரை திருமுருகன் இயக்க, மௌலி, வடிவுக்கரசி, ஷ்ரித்திகா, சுஜித், சங்கவி, சர்வன் ராஜேஷ், சாந்தி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த தொடர், தம்பதியரான சுந்தரம் (மௌலி) மற்றும் ஞானாம்பாள் (வடிவுக்கரசி) அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் கதையை சொல்கிறது. வெவ்வேறு தலைமுறையினர் ஒருவருக்கொருவர் மோதும் போது அவர்களின் குடும்ப உறவுகளுக்குள் வரும் பிரச்சினைகளை தாண்டி எப்படி ஒற்றுமையாக வாழ முயற்சிக்கிறார்கள் என்பதுதான் இந்த நெடுந்தொடரின் கதை.

“குலதெய்வம்” நெடுந்தொடரை கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *