சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், இன்று தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 2வது கட்ட தேர்தலின் போது தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 97 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 19ந்தேதி தொடங்கியது.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. மனுதாக்கல் செய்ய இன்றே (26-ந் தேதி) கடைசி நாள்.

நாளை ( 27-ந்தேதி) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

29-ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *