lic-51115கடந்த சில நாட்களாக எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வருவதாகவும், அந்த அழைப்பில் பேசும் பெண் பேசும் பெண் ஒருவர் பாலிசிதாரர்களிடம் அவருடைய பாலிசி எண்ணைத் தெரிவித்து, நீங்கள் எல்.ஐ.சி. நிறுவனம் பெயரில் 12 ஆயிரத்து 546 ரூபாய்க்கு காசோலை அனுப்பினால், உங்களுக்கு போனஸாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து வருவதாகவும், இதுபோன்ற போலி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம் என்றும் என எல்.ஐ.சி. நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது குறித்து எல்.ஐ.சி நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியபோது, “பாலிசிதாரர்கள் பிரீமியம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கு காசோலை மூலமாக பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு காசோலை வழங்கும் போது ‘எல்ஐசி ஆப் இந்தியா’ என்று முழு பெயரை குறிப்பிட வேண்டும். காசோலையின் பின்புறம் பாலிசி எண்ணை குறிப்பிட வேண்டும். பணமாக செலுத்தும்பட்சத்தில் எல்ஐசி அலுவலகங்களில் மட்டுமே செலுத்த வேண்டும். பணம் செலுத்திய உடன் வழங்கப்படும் ரசீதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியின் நிலை குறித்து www.licindia.in என்ற இணையதள முகவரி மூலம் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். எல்ஐசி நிறுவனம் எக்காரணம் கொண்டும் பாலிசிதாரர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரீமியம் கட்டுவது, போனஸ் வழங்குவது குறித்து பேசுவது கிடையாது. எனவே, பாலிசிதாரர்கள் எல்ஐசி நிறுவனம் பெயரில் வரும் போலி தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம்.

அதேபோல், முதிர்வடைந்த பாலிசி களுக்கான தொகை, போனஸ் உள்ளிட்டவை பாலிசிதாரர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் தேசிய மின்னணு பண பரிவர்த்தனை (NEFT) மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது.

எனவே, பாலிசிதாரர்கள் தங்களுடைய மின்னணு பண பரிவர்த்தனை குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட எல்ஐசி நிறுவனத்தின் கிளையில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது
English summary-LIC has alerts its customers about fake calls.