சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டு வந்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.

சென்னை அண்ணாநகர், அடையாறு, மீனம்பாக்கம், வடபழனி, கீழ்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், பல்லாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பனி பொழிவது போன்று லேசான மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம், மீஞ்சூர், பெரியபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *