அ.தி.மு.க.வின்  முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது:  அதில் முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி. துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 4 அமைச்சர்கள்இடம் பெற்று உள்ளனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர், நிதி அமைச்சர் மற்றும் அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் எடப்பாடி தொகுதியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நிற்கிறார்.

வட சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் தொகுதியில், மீன்வளத் துறை அற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயகுமார் நிற்க இருக்கிறார்

விழுப்புரம் தொகுதியில் தமிழக சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நிற்கவிருக்கிறார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி. சண்முகநாதனும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டைத் தொகுதியில் தேன்மொழியும் நிற்கவிருக்கிறர்கள்.

போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி
ராயபுரம் – ஜெயக்குமார்
விழுப்புரம் – சி.வி.சண்முகம்
ஸ்ரீவைகுண்டம் – சண்முகநாதன்
நிலக்கோட்டை – தேன்மொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *