ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அரசின் முடிவிற்கு பின் அறிவிக்கப்படும்.+1, +2 மாணவர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.

கல்வியாளா்களின் கருத்துக்களை மாணவா்களிடம் எடுத்துச்செல்ல புதிய தொலைக்காட்சி தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வரும் 21-ம் தேதி தொடங்கி வைக்கின்றனர்.அதேபோல் ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *