பெரம்பலுார்: ”தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும்” என தமிழக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று பெரம்பலுாரில் நடந்தது.

இதில் பங்கேற்ற தமிழக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாத இறுதியில் வெளியிடப்படும். லோக்சபா தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்.

வாக்காளர்கள் ஓட்டளித்து தங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நேரடி தேர்தல் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் வாக்களித்து உள்ளாட்சி அமைப்புகளின் துணைத் தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் ஜூலைக்குள் முடிவடைந்துவிடும். தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் முடிவடைந்துள்ளன. மேலும் 10 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *