தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து “மெட்ராஸ் ஐ” கூடுதலாக பரவி வருகிறது. கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் வழிதல், வீக்கம் ஆகியவை “மெட்ராஸ் ஐ” நோயின் அறிகுறியாகும்.

தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகின்றனர். மெட்ராஸ் ஐ பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 1.50 லட்சம் பேருக்கு மெட்ராஸ் ஐ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தாமாக மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம், மருத்துவர் அறிவுறுத்தல்படி மருந்து வாங்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *