மதுரையிலிருந்து பழனி வழியாக கோவை வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில், மேலும் 3 மாதங்களுக்கு கோவை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரையிலிருந்து பழனி வரையில் இயக்கப்பட்ட ரயில் (வண்டி எண் 56710), பழனியில் இருந்து கோவை வரையில் சிறப்பு ரயிலாக (வண்டி எண் 6710) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருந்து இயக்கப்பட்டது. அதேபோன்று பழனியிலிருந்து மதுரை வரையிலும் இயக்கப்பட்ட ரயில் (வண்டி எண் 56709) கோவையிலிருந்து பழனி வரையிலும் சிறப்பு ரயிலாக (வண்டி எண் 6709) இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதே ரயில் சேவை 2019 ஜனவரி 15 ஆம் தேதி வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *