சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 8-ம் தேதி இரவு 11.30 முதல் 9-ம்தேதி காலை 5.30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு நாளை( 8-ம்தேதி) இரவு 11.30 முதல் மறுநாள் (9-ம்தேதி) காலை 5.30 வரை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட நேரத்தில் கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும், செங்கல்பட்டிலிருந்து கடற்கரை செல்லும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *