சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் மட்டும் இரவு நேர பேருந்துகள் 603 வழித்தடங்களில் 550 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 550 மாநகர பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் இருந்து ஈசிஆர் வழியாக பாண்டிச்சேரி வழியாக மற்ற ஊர்களுக்கு கடற்கரையை ஒட்டிய செல்லும் அனைத்து பேருந்துகளும் மாற்று வழிகளில் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். புயல் கரையை கடக்கும் போது கடற்கரை சாலைகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படாது எனவும்,

அதற்கு பதிலாக, சென்னையில் இருந்து புதுவை, நாகை, சிதம்பரம், வேளாங்கண்ணி, கடலூர், மயிலாடுதுறை கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் திண்டிவனம் சென்று அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *