சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு வளாகத்தில் சுயசேவை பிரிவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 மற்றும் 5 கிலோ எடையிலான சமையல் கேஸ் சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்து, விற்பனையை நேற்று தொடங்கிவைத்தார்.

சிறிய அளவிலான சமையல் கேஸ் சிலிண்டர்கள், பலதரப்பட்ட மக்களும் பயனுறும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றைப் பெற எவ்வித முகவரிச் சான்றும் தேவையில்லை. ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை மட்டும் சமர்ப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

2 கிலோ சிலிண்டரின் புதிய இணைப்புக்கு ரூ.961.50 – ம், எரிவாயு நிரப்புவதற்கு ரூ.253.50 – ம், 5 கிலோ சிலிண்டர் புதிய இணைப்புக்கு ரூ.1,528 – ம், எரிவாயு நிரப்புவதற்கு ரூ.584 என இந்தியன் ஆயில் நிறுவனத்தால் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *