தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக குறைத்தது. 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது, பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு தொடங்கியது என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

இந்நிலையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பச்சை நிற சீருடை வழங்கப்படும் எனவும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழுப்பு நிற சீருடை வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் மேலும் ஒரு சீர்திருத்த திட்டத்தை இன்று அறிவித்துள்ளார்.

இந்த புதிய சீருடைகள் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் சீருடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *