Gopinath-181115‘தனி ஒருவன்’, ‘மாயா’, ‘நானும் ரெளடிதான் ஆகிய மூன்று தொடர் வெற்றி படங்களில் நடித்த நடிகை நயன்தாரா தற்போது ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் ‘திருநாள். கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் தொலைக்காட்சியில் ‘நீயா நானா’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் கோபிநாத், முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வருகிறார்.

கோபிநாத் திரையுலகிற்கு புதியவர் இல்லை என்பது அனனவரும் அறிந்ததே. சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா, சரத்குமார் நடித்த ‘நிமிர்ந்து நில்’ உள்பட ஒருசில படங்களில் கோபிநாத் நடித்துள்ளார். இந்நிலையில் ஜீவா-நயன்தாரா நடித்து வரும் ‘திருநாள்’ படத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக கோபிநாத் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

புகழேந்தி என்ற கேரக்டரில் ஐபிஎஸ் அதிகாரியாக கோபிநாத் நடித்து வருவதாகவும், அவருடைய கேரக்டர் நயன்தாரா கேரக்டருக்கு உதவி செய்யும் கேரக்டரா? அல்லது வில்லத்தனமான போலீஸ் கேரக்டரா? என்பது குறித்து படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சமீபத்தில் பிரபல பாடகர் விஜய்ஜேசுதாஸ் ‘மாரி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதேபோல் கவுதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் பிரபல பாலிவுட் பாடகர் பாபா ஷீகல் என்பவரும் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பாடகர்கள் போலீஸ் வேடங்களில் நடித்து வரும் நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளரான கோபிநாத்தும் போலீஸ் கேரக்டரில் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.English summary-Neeya Naana Gopinath to act as IAS officer