சென்னை: தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது, 2018-19-ம் கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய பாடப்புத்தகம் அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

அதைத்தொடர்ந்து 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடையும் நிலையில் இருக்கிறது. 2020-21-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு உரிய முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க முடியும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும், 2020-2021-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குரிய பாடப்புத்தகங்களை வரும் கல்வியாண்டிலேயே(2019-2020) நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *