சென்னையில் முதன்முதலாக மெட்ரோ ரயில் விரைவில் இயங்கவுள்ளது. மெட்ரோ ரயில் இயங்கும் முதல் நாளை பல்வேறு விதமாக பல்வேறு துறைகள் கொண்டாட முடிவு செய்திருக்கும் நிலையில் அஞ்சல் துறையும் தனது பங்கிற்கு மெட்ரோ ரயில் இயங்கும் நாளில் சிறப்பு சிறப்பு அஞ்சல் உறை ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கும் நாளில் இந்த உறையை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அஞ்சல் உறையை எப்படி வெளியிடுவது என்பது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும் அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முதல் நாளில் சென்னை முதல் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் இந்த அஞ்சல் உறையை இலவசமாக வழங்கும் யோசனையும் உள்ளதாக தமிழக அஞ்சல் வட்ட உயரதிகாரி தெரிவித்தார்.

இந்த சிறப்பு அஞ்சல் உறை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள், தமிழக அரசு உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

English Summary : Chennai Postal department releasing a new postal cover by honoring Metro Rail.