மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் உடைமைகள், மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் பலவும் மழை நீரில் சேதமடைந்ததாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த சூழலில், மழையால் சேதமடைந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதள பக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://mycertificates.in என்ற இணையதளத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்து, சேதமடைந்த சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இது பற்றிய சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற டோல் ஃப்ரீ எண்ணை தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *