தென்மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு சாரணர் பயிற்சி பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Group ‘C’ Level 2
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Group ‘C’ Level 1
காலியிடங்கள்: 08
வயதுவரம்பு: 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்ஏசி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட இரு பணியிடங்களுக்கும் சாரணர் அமைப்பில் 5 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும். தேசிய, மாநில அளவில் நடைபெற்ற சாரணர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.250. இதனை Asst.Personnel Officer, HQ, South Western Railway, Hubballi என்ற பெயரில் Hubballi -ல் மாற்றத்தக்க வகையில் IPO ஆக எடுக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: www.rrchubli.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்று செய்யப்பட்ட அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Assistant Personnel Officer/HQ, Railway Recruitment Cell, South Central Railway, 2nd Floor, Old General Manager, Office Building, Club Road, Hubballi – 580 023.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.01.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rrchubli.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *