ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு இடைக்கால தடைவிதித்துள்ளது. இந்தாண்டு நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடைகள் திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.

தீபாவளி பண்டிகையின் போது நேரடியாக பட்டாசு விற்பனை செய்வது தான் இதுவரை வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்தாண்டு ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.

சென்னை சேர்ந்த பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைனில் பட்டாசு விற்பனை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் அவசர மனுவை தாக்கல் செய்தார். மேலும், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவையும் தற்போது ஆன்லைனில் விற்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வது தொடர்பான வழக்கு வரும் நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *