தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

ஏப்ரல் 18ம் தேதி 2ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது.

வரும் 26 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை 27ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற 29ம் தேதி வரை அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக சார்பில் இன்று காலை தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. இதற்கிடையில் ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 91 தொகுதிகளில் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற உள்ள முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.

ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலபிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும் நேற்று தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *