சென்னையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அண்ணா நகர், தியாகராயர் நகர் போன்ற இடங்களில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதிகள், நடைபாதை வசதி என 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் சுரங்கப்பாதை, உயர்மட்ட பாதை இன்றி சாலையிலேயே செல்லும் வகையில் அமையவுள்ளது. சாலையோரம் அல்லது மையப்பகுதியில் தண்டவாளம் அமைத்து மணிக்கு 30 கி.மீ வேகத்தில் ரயில் செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக 2.50 லட்சம் பேரிடம் நேரடியாக கருத்து கேட்க ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *