சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு, தேர்வு முடிவு வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள், scan.tndge.in என்ற, இணையதளத்தில், பதிவு எண்களை தெரிந்து கொள்ளலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *