பிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. வரும் ஏப்.19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
தமிழக பள்ளி கல்வித் துறையின் சமச்சீர் பாடத் திட்டத்தின்படி பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய சில பாடங்களைத் தவிர மற்றவை எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர் எழுதினர்.

இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *