சென்னை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அரசு தேர்வு துறை பணியாளர்களும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது.

ஆசிரியர்கள், தேர்வுத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் செய்முறை தேர்வில் பாதிப்பு ஏற்படுமா? என்று அரசு தேர்வு துறை இயக்குனர் தண். வசுந்தராதேவியிடம் கேட்டபோது, பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏற்கனவே அறிவித்த நாட்களில் திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *