பொன்னேரியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேவையில் மாற்றப்படும் ரயில்கள்: மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-கும்மிடிப்பூண்டிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.15, 9.30, 10.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மூர்மார்க்கெட் காம்ப்ளக்சில் இருந்து மீஞ்சூர் வரை மட்டும் இயக்கப்படும்.

மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-கும்மிடிப்பூண்டிக்கு காலை 9 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மூர் மார்க்கெட் காம்ப்ளக்சில் இருந்து எண்ணூர் வரை மட்டும் இயக்கப்படும்.

கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காம்ப்ளக்சுக்கு காலை 10.20, முற்பகல் 11.20, 11.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மீஞ்சூரில் இருந்து மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை இயக்கப்படும்.

சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் காம்ப்ளக்சுக்கு பகல் 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-எண்ணூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் எண்ணூரில் இருந்து மூர்மார்க்கெட்காம்ப்ளக்ஸ் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *