பூந்தமல்லி – போரூர் தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த மாத இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்த சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பூந்தமல்லி -போரூர் மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
