கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சல், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சேவை தொடர்பான புகார்களுக்கு இந்த முகாமில் தீர்வு காணப்படும்.

அஞ்சல் சேவை சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகார்களில் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும்முகவரி இணைக்க வேண்டும்.

குறைகளை வரும் 13-ம்தேதிக்குள்

“அஞ்சல் சேவை குறைதீர் முகாம்”
நா. பிரகாஷ், முதன்மை அஞ்சல் அதிகாரி,
அண்ணா சாலை தலைமை தபால்நிலையம்,
சென்னை-2.

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *