சென்னையில் நாளை (09.02.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கொட்டிவாக்கம் மற்றும் திருவான்மியூர்:

ஜெர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், திருவள்ளுவர் நகர், கொட்டிவாக்கம் குப்பம், ஈ.சி.ஆர். மெயின் ரோடு, பாலகிருஷ்ணா நெடுஞ்சாலை, காவலர் குடியிருப்பு, திருவீதியம்மன் கோவில் தெரு, கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு மாடத்தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

சிட்கோ தொழிற்சாலை எஸ்டேட் வடக்கு பகுதி, குளக்கரை தெரு, பஜனை கோயில் தெரு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, காச்சின குப்பம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ராயபுரம்:

எம்.சி.ரோடு, கல்லறை சாலை, எம்.எஸ்.கோயில் தெரு, மசூதி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, தாண்டவமூர்த்தி தெரு, என்.ஆர்.டி. சாலை, வேலாயுதபாண்டியன் தெரு, பஜனை கோயில் தெரு, நல்லப்பா வாத்தியார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *