லோக்சபா தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்க உணவு வழங்கல் துறை தடை விதித்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை வாங்க ரேஷன் கார்டு அவசியம்.

புதிய ரேஷன் கார்டுக்கு,பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பின் அதை ஆய்வு செய்து உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும். லோக்சபா தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ல் நடக்கிறது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 10 முதல் அமலுக்கு வந்துஉள்ளன. அதனால் தேர்தல் முடியும் வரை பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *