தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு இன்று (19.09.2023) முதல் தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த தேர்வுகள் வருகிற 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

முன்னதாக கடந்த 15-ம் தேதி 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 28-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது. அதனால் அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை பின்பற்றி தேர்வு எழுதினால் ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *