சென்னை : ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மழை தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் வட கிழக்கு பருவ மழை முடிவடையும் நிலையில் உள்ளது. தென் மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது, பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் அதிகபட்சமாக 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

பாபநாசத்தில், 4; கோவை மேட்டுப்பாளையத்தில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது.’தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.’சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான துாறல் விழும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *