சென்னை: கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இன்று 11 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:

மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மதுரை-திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா ரயில், நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி ரயில், மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மலபார்,மாவேலி ரயில்கள் , திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தன்ரயில், மங்களூருவில் இருந்து கொச்சுவேலி செல்லும் ரயிலும்ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

திருச்சூர் ஆலுவா, ஆழப்புழை, எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *