சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தை கடந்த 2010ஆம் ஆண்டு இயக்கிய இயக்குனர் ஷங்கர் தற்போது அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். ‘எந்திரன் 2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்ட ஷங்கர் தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றாராம்.

இந்த படத்தில் நாயகனாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு வில்லனாக நடிக்க பெரிய நடிகர்களிடம் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. வில்லன் வேடத்திற்கு கமல்ஹாசன், ஷாருக்கான், அஜீத் ஆகியோர்களிடம் பேச்சு நடத்திய ஷங்கர் தற்போது வில்லன் வேடத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அவர்களை ஒப்பந்தம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

அர்னால்டு ‘எந்திரன் 2’ படத்தில் நடிக்க 25 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடித்து முடித்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், அர்னால்டு, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் என முன்னணி பிரபலங்கள் நடிக்கவுள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடியை தாண்டிவிடும் என கூறப்படுகிறது. இந்த படத்தை விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

English Summary : Shankar plans to take Endhiran part 2 with Rajinikanth as hero and Hollywood Star Arnold Schwarzenegger as Villan.